ஜிம்பாவேயில் வாழும் தீக்கோழி மக்கள் (Ostrich people)

மேற்கு ஜிம்பாவே எல்லைக்குள் வடோமா என்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். இவர்களை ஆஸ்ட்ரிச் பீப்பிள் (ostrich people) என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்.

அதற்கு காரணம் இந்த மக்கள் எல்லாருக்குமே காலில் இரண்டே இரண்டு விரல்கள் தான் இருக்கிறது. இவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்கிறார்கள் இந்த மக்கள் எல்லாருக்குமே இரண்டு விரல்கள் கொண்ட கால் தான் இருக்கிறது.

இது ஒரு அரிய மரபணு நிலை பாதிக்கப்படும் நோயாகும். இவர்களுக்கு இருகக்கூடிய இரண்டு விரல்களும் உள்கூட்டியே வளைந்திருக்கிறது.
ஆஸ்ட்ரிச் பறவையின் கால்கள் இப்படித்தான் இருக்குமாம். அதனால் இவர்களை ஆஸ்ட்ரிச் மக்கள் (ostrich people) என்றே அழைக்கிறார்கள். ஆனால் இவர்களை யாரும் ஊனமுற்றவர்கள் என்று சொல்வதில்லை.
இவர்களால் ஷூ மற்றும் செருப்பை பயன்படுத்த முடியாது. காலில் வினோதமான வடிவில் இரண்டே இரண்டு விரல்கள் மட்டும் இருப்பதே இதற்கு காரணம். இப்படியான விரல்கள் இருப்பதால் இவர்களால் வேகமாக ஓட முடியாது. சிலருக்கு நடப்பதும் சிரமமாகவே இருக்கிறது. ஆனால் இந்த கால்களின் உதவியுடன் சாதரண மனிதர்களை விட மிக வேகமாக மரம் ஏறுகிறார்கள்.
இவர்களுடைய முன்னோர்கள் விண்வெளியில் இருந்தவர்கள் என்றும் பூமியில் இருக்கக்கூடிய பெண்ணிடம் உறவு கொண்டு காலங்காலமாக பூமியில் அடுத்தடுத்த சந்ததியினருடன் பூமியில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள்.

பெரும்பாலும் இவர்கள் மக்கள் கூட்டத்தை விட்டு தள்ளியே இருக்கிறார்கள். இந்த மக்கள் யாரும் பிறருடன்,பிற இன மக்களுடன் சேர்ந்து பழகுவதில்லை.
தங்கள் மரபணுவுடன் பிற மரபணுக்களை சேரவிடுவதில்லை. இரட்டை விரலுடன் பிறப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள். வேறு இனத்தில் சேர்ந்து திருமண பந்தத்தில் இணைந்தால் இந்த இரட்டை விரல் மரபணு குலைந்துவிடும் என்று நினைப்பதும் இதற்கு ஒரு காரணம்.

Comments