தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
இதில் பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் இல்லை. இந்த புதிய அட்டவணை நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

Comments