கொத்தவரை

Related image

நரம்பு மண்டலத்தின் வேலை


நரம்புகள் என்பது உடலின் எல்லா பாகங்களிலும் அமைந்து இருக்கின்றது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எங்கெல்லாம் தோல் இருக்கின்றதோ அதன் பின்புறம் நரம்புகள் இருக்கின்றன. நரம்புகள் மூலம் எல்லா தகவல்களும் மூளைக்குச் சென்று மீண்டும் தகவல்கள் உடலுக்கு வருகின்றன.


நரம்பு மண்டலத்தின் ஊக்க சக்தி தோல், வியர்வை துவாரம். வியர்வை துவாரம் வழியாக உடல் மின்காந்த அலைகளை பூமியிலிருந்து எடுத்துக் கொள்கிறது.


நரம்புகளின் முக்கியமான வேலைகள், தசைளின் இயக்கத்திற்கு உதவுகின்றது. தசைகள் விரிவடைகிறது, சுருங்குகின்றது. இந்த சுருங்கி விரியும் இயக்கத்தால் தான் உடலில் இயக்கங்கள் நடைபெறுகின்றன. எனவே தசைகள் விரிவடைய சூடு தேவை. சுருங்குவதற்கு குளிர்ச்சி தேவை. அப்படியெனில் எவ்வளவு வெப்பம் கொடுத்தால் எவ்வளவு விரிய வேண்டும், எவ்வளவு குளிர்ச்சி கொடுத்தால் எவ்வளவு சுருங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது தான் நரம்பு மண்டலத்தின் முக்கியமான பணியாகும்.உடலின் தட்ப வெப்ப நிலையினை கட்டுப்படுத்தி பராமரிப்பது தான் நரம்பு மண்டலத்தின் முக்கியமான வேலையாகும்.


நரம்பு மண்டலத்தின் தட்ப வெப்ப நிலையினைப் பொறுத்து தான் தசை மண்டலம் இயக்கம் பெறுகிறது. நரம்பும் தசையும் இணையுமிடத்தில் நரம்புகள் கொடுக்கும் அறிவைக் கொண்டு தசைகள் இயங்குகின்றன. நரம்புகள் சரியான தகவலை தசைகளுக்கு கொடுக்கின்றன. நரம்புகள் சரியான தகவலை தசைகளுக்கு கொடுக்கவில்லை என்றால், தசைகள் சுருங்கி, விரிவதில் பிரச்சனைகள் ஏற்படும். தசைகளால் விரிய முடியாத நிலை என்பது வேறு. சரியான தகவல் வராததால் விரிய முடியவில்லை என்பது வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

கொத்தவரங்காயின் நன்மைகள்


  • நாம் நமது உடலில் நிரந்தரமாக இரண்டு தெர்மாமீட்டரை கொண்டுள்ளோம். அது 24மணி நேரமும் வேலை செய்து கொண்டேயிருக்கிறது. அது தான் நமது இரண்டு காதுகள். இந்த காதுகள் நமது உடலின் மொத்த உஷ்ணத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இந்த உஷ்ணம், குளிர்ச்சியில் மாறுபாடு ஏற்பட்டால் உடலில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படலாம்.தலைவலி,பக்கவாதம் , முடக்குவாதம் போன்ற எந்த நிகழ்வுகளும் நடக்கலாம். இதற்கு அடிப்படை காரணம் நரம்புகள் அந்த வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சரியான தகவல்களாக கொடுக்க முடியாமையே.


  • வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாகயிருக்கும். பனிக்காலங்களில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே ஒரு சிலருக்குவெயில் காலமும் சேராது,பனிக்காலமும் சேராதுஅதிகப்படியான உஷ்ணத்தினால் உடலில் கொப்பளம் , அம்மை போன்ற நோய்கள் ஏற்படும். அதிகப்படியான குளிர்ச்சியின் காரணத்தினால் ஜன்னிஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவர்களுக்கு குளிர்காலமும் சேராது,வெயில் காலமும் சேராது. மற்றும் காற்று,மழைக் காலமும் சேராது. மொத்த காலத்திலுமே நோயாளியாகவே இருப்பார்கள். வியாதி மட்டும் மாறி மாறி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். நிரந்தர நோயாளியாகவே இருப்பார்கள். இதற்கு காரணம் நரம்பு மண்டலம் சீராக இயக்கம் நடைபெறவில்லை என்பதே காரணம். நரம்பு மண்டலம் சரியான இயக்கத்தில் இருந்தால் மொத்த வருடமும், எந்த சீதோஷ்ண நிலையிலும் சுகமாக வாழ முடியும்.


  • எந்த காரணம் என்று தெரியாமலே சிலருக்கு தலைவலி ஏற்படும். உட்கார்ந்தால், பேசினால், சப்தம் வந்தால் , வாசனை நுகர்ந்தால் அதாவது தொட்டதற்கெல்லாம் காரணமேயின்றி தலைவலி ஏற்பட்டால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்துள்ளது என்று பொருள். பசித்தால் ஏற்படும் தலைவலிக்கும், தலைக்கு குளிப்பதால் ஏற்படும் தலைவலிக்கும் ஒரு காரணம் உள்ளது. எனவே காரணமில்லாமல் ஏற்படும் தலைவலிக்கு நரம்பு பாதிப்பே காரணமாக அமைகிறது.


  • நம் உடலில் நரம்புகள் வெப்பநிலையினை சரியாக பராமரிக்கவில்லை எனில் அந்த இடத்தின் செயற்பாடுகள் செயல் இழந்து போகும். இதனால் வலிப்பு,பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.


  • அதிக சூட்டினால் கண்களை சுற்றி வீக்கம்கட்டிகள் ஏற்படும்.


  • நமது வெப்பநிலையினை பராமரிப்பது நமது காதுகள். காதில் உள்ள நீர் வற்றி காது நிரந்தரமாக அடைக்கும் நிலை ஏற்படும். கொஞ்சம் குளிர் இருந்தாலும் காதுகள் அடைத்துக் கொள்ளும். காதுக்கும் உடற்சூட்டிற்கும் நேரடி தொடர்பு உண்டு.


  • தண்ணீரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்பொழுது பனிக்கட்டியாகிறது அதன் நிறம் வெண்மை. அதுபோல நம் உடலில் உள்ள நீர்நிலைகள் அதிக குளிர்ச்சியால் கெட்டியாகி விடும். இதனால் சளி வெண்மை நிறமாக வரும்இதற்கும், நோய் கிருமிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. குளிர்ச்சியால் ஏற்படும் இந்த சளிக்கு கொத்தவரங்காய் தீர்வாகும்.


  • உடலில் நரம்பு மண்டல பாதிப்பு வீக்கமாக வெளிப்படும். வாய்,தொண்டை, வீக்கம் ஏற்படும். (டான்சில், பொன்னுக்கு வீங்கி )


  • குளிர் தாங்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்படும்.


  • வயிற்றில் உள்ள சூடு, குளிர்ச்சி சரியில்லாத காரணத்தினால் சாப்பிட்டால் வயிற்றுவலி ஏற்படும்.


  • மலம் போகும் பொழுது சூடு, குளிர்ச்சி சரியில்லாத காரணத்தினால் ஏற்படும் மூலம்இரத்தம் என்பது வெயிற்காலத்தில் தண்ணீர் போல் இருக்கும். அப்பொழுது ஒரு உறுப்பிற்கு அதிக அளவில் இரத்தம் செல்லும். ஒரு செடிக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றினாலும், ஊற்றாவிட்டாலும் தவறு. ஒரு உறுப்பிற்கு அதிக இரத்தம் போக கூடாது. எனவே அந்த இரத்தமானது நீர்த்த தன்மையிலிருந்து கெட்டித் தன்மைக்கு வரவேண்டும். அதற்குண்டான வெப்ப நிலையினை உடல் உருவாக்க வேண்டும். இரத்தம் திடீரென்று சூடு ஆகும். திடீரென்று குளிர்ச்சி ஆகும். இரத்தம் குளிர்ச்சியாக இருக்கும் பொழுது இரத்த நாளங்கள் சுருங்கும், இரத்தத்தின் அளவு குறைவாக செல்லும். குளிர்காலத்தில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க இரத்தத்தில் சூட்டின் அளவினை அதிகப்படுத்த வேண்டும். இரத்த நாளங்கள் விரிய வேண்டும். அப்பொழுது தான் இரத்த ஓட்டம் மிகச் சரியாக செல்லும். ஒரு உடம்பிற்கு என்ன சரியான அளவு தேவை என்பதை நிர்ணயம் செய்வதற்கு நரம்புகளின் இயக்கம் மிக முக்கியம்.

  • இரத்தம் சரியாக கட்டுப்படுத்த முடியாததால் சிறுநீரில் இரத்தம் வெளியேறும்.


  • தோலில் சூட்டினால் கொப்பளம்அம்மை ஏற்படும். அம்மை நோய் ஏற்படக் காரணம் நரம்பு மண்டலம் தான். அம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு 1 நாளைக்கு3 வேளை 10 கொத்தவரங்காய், 5 கோவைக்காய் மற்றும் ஒரு எலுமிச்சம்பழம் தோலுடன் சேர்த்து ஜுஸ் கொடுத்து வந்தால் உடனடியாக அதிசயங்கள் நிகழும்.


  • கொத்தவரங்காய்க்கு மிகப் பெரும் ஆற்றல் உண்டு. அது இடம், பொருள் தெரிந்து மிகச் சரியாக வேலையை செய்யும். கொத்தவரங்காயில் பாதரசம் உள்ளது. இது தேவ அமிர்தத்திற்கு ஒப்பானது. செயலிழந்த மனிதனை செயல்பட வைக்கும் நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயல்பட வைக்க மருந்துகள் இல்லை. மருந்துகள் எடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படும். ஆரோக்கியத்திற்கு கொத்தவரை போல் ஒரு சக்தி வாய்ந்த பொருள் உலகில் இல்லை. இது சிறந்த வலி நிவாரணியாக செயற்படும்.

குணம் : எளிமை



எளிமை என்பது ஒருவருக்கு எந்த பிரச்சினை அல்லது சூழ்நிலை வந்தாலும் அவரால் சமாளிக்க முடியும். எதையும் கையாளும் பக்குவமே எளிமைஒரு சிலர் ஒரு சிறிய பிரச்சினையை ஊதி ஊதி பெரியதாக்கி பிரச்சினையை எங்கோ கொண்டு சென்று விடுவார்கள். அதாவது பிரச்சினையை சரி செய்ய தெரியாமல் அதை பெரிதுபடுத்தி விடுவார்கள். இதனால் தான் அதிகமாக தலைவலிக்கு மாத்திரை விற்பனை செய்யப்படுகிறது.


ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை அந்த சூழ்நிலைக்கேற்றவாறு யார் மாற்றிக் கொண்டே இருக்கின்றார்களோ அவர்களுக்கு பிரச்சினைகள் வராதுஎந்த பிரச்சினைகள் வந்தாலும் தம்மை மாற்றிக் கொள்வார்கள். இதனால் இவர்களுக்கு எந்த தலைவலியும் வராது. கட்டாயப்படுத்தி அவர்களை மாற்றம் கொண்டு வந்தால் பிரச்சினைகள் ஏற்படும். தலைவலி ஏற்படும். இதை தான் எளிமை என்று அழைக்கின்றோம்.


எளிமை என்பது மிக முக்கியமானது. உலகம் எப்பொழுது தோன்றியது என்பதற்கு விஞ்ஞானம் ஒரு காலத்தினையும், ஆன்மீகம் ஒரு காலத்தினையும் கூறுகிறது. ஆனால் உண்மையாக ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இப்பொழுது மணி 12 என்றால் நாளையும் இதே நேரம் இந்த 12மணி வரும். எந்த இடத்தில் நிற்கின்றோமோ அதே இடம், அதே காலத்தினை நாம் சந்திக்கின்றோம். இதே காலத்தை நாம் நேற்று சந்தித்தோம், இன்று சந்திக்கின்றோம்,நாளையும் நாம் சந்திப்போம். எனவே நேரத்தை கணக்கிடும் போது நீளவாக்கில் கொள்ளக் கூடாது. உலகம் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. உலகம் கிடையாது. சுற்றும் இந்த விஷயத்தை நீட்டி விட்டோம் என்றால் மிகப் பெரிய பிரச்சினையில் நாம் வீழ்ந்து விடுவோம். கடவுளின் படைப்பு என்பது சுழற்சிக்கு உட்பட்டது இந்த மறு சுழற்சியை நீளமாக மாற்றினால் பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம்.


மேற்கத்திய நாடுகள் பண்பாடு, நாகரிகம் குன்றிய மனித சமுதாயம். இப்பொழுது நாகரிகமாக மாறியுள்ளான் என்று கூறுகிறது.ஆனால் நம் பாரத தேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் மிகுந்த நாகரிகத்துடனும், தேவதைகளாகவும் வாழ்ந்தார்கள். லக்ஷ்மி நாராயணனாக இருந்தார்கள். இராம் சீதையாக வாழ்ந்தார்கள். தேவதைகளின் சித்திரத்தை, சிலைகளை நாம் கோவில்களில் வைத்துள்ளோம். ஏனெனில் இவர்கள் இப்படி வாழ்ந்தார்கள் என்பதின் அடையாளம். அது போல உயர்ந்த மனித சமுதாயமாக வாழ்ந்ததால் அவர்களுக்கு ஒரு நினைவு சின்னம். இப்படியும் ஒருவர் இருந்தார் என்பதற்கு ஒரு சிலைஅவர்கள் வாழ்ந்த ஒரு வாழ்க்கை ஒரு அடையாளமாக உருவாக்கப்பட்டதால் அவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம், ஒரு கோவில். நமது நாகரிகம் மிகவும் உயர்ந்தது.


இந்த உலகம் சுழற்சிக்கு உட்பட்டது. இந்த உலகம் 4 நிலைகளில் இயக்கம் கொண்டுள்ளது. வருடத்திற்கு 4 பருவங்கள் உள்ளது போல் இந்த உலகம் 4யுகங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. யுகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது நீங்கள் உண்ணும் உணவு, உடை, இருப்பிடம் எதுவும் அடுத்த யுகத்திற்கு கலாச்சாரமாக வராது. அதற்கு அடுத்து வரும் மனித சமுதாயத்தில் எந்த ஒரு அடையாளமும் முன்பு போல் இருக்காது.


உலகின் கலாச்சாரத்தை நான்காக பிரிக்கின்றோம். அதைத் தான் நான்கு யுகங்களாக பிரிக்கின்றோம்.
1. சத்யுகம்
2. திரேதாயுகம்
3. துவாபரயுகம்
4. கலியுகம்


சத்தியத்திற்கு மட்டுமே கட்டுப்பட்ட சமுதாயம் சத்தியுகம். எந்த நல்லதையுமே ஏற்றுக் கொள்ள முடியாமல் தான்தோன்றி தனமாக வாழ்வது கலியுகம். இந்த நான்கு யுகங்களை குறிக்கும் அடையாளம் தான் ஸ்வஸ்திக். இந்த உலகம் 4 யுகங்களாக மாறுபட்ட கலாச்சாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. நாம் வாழும் இடத்தில் மனிதர்கள் எப்படியிருக்கின்றார்களோ அதற்கேற்ற வகையில் உன்னை சீர்படுத்திக் கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஸ்வஸ்திக்கின் அடையாளம்.

இடம், பொருள், ஏவல் அறிந்து அந்த சுழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வது தான் எளிமை. சிறிய பிரச்சினையை பெரியதாக்கி, வன்முறைகள் அதிகமாகி இந்த மனித சமுதாயம் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கின்றது. இந்த உலகம் இரண்டு வழிகளில் செயற்படுகின்றது.


1. ஆக்கபூர்வ சக்தி
2. அழிக்க கூடிய சக்தி


அழிக்கக்கூடிய சக்தியை நாம் அழிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். உலகில் சத்தியத்தின் பாதையும்,அழிவின் பாதையும் மேலே சென்று கொண்டிருக்கும். ஒரு நிலையில் அழிவு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இறங்கி விடும். சத்தியத்தின் பாதை உயரே சென்று கொண்டிருக்கும். எனவே நாம் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும், சிந்திக்க வேண்டும். எனவே எப்பொழுதுமே நன்மையை மட்டுமே சிந்தித்தால் இந்த பிரபஞ்சம் நன்மையே உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும்.


இந்த நான்கு யுகங்களும் சுழற்சிக்கு உட்பட்டது. இந்த சுழற்சியில் முதல் நிலையில் இருந்தவர்கள் உயர்ந்த தர்மத்தை சார்ந்தவர்கள். இது சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது.


மனித சமுதாயம் சுழற்சிக்கு உட்பட்டது. உலக நாடகத்தில் உன்னதமான பகுதி தேவதை பகுதி. கீழ்தரமான பகுதி மனித பகுதி. ஒரு மனிதன் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு சரியான உதாரணம் இன்றைய மனிதன் தான்.


ஆனி மாதத்தில் கோவில்களில் சாமி சிலைகளுக்கு திருமஞ்சனம் சாத்துவார்கள். மஞ்சள், சந்தனம் , குங்குமம், பச்சை கற்பூரம் சேர்ந்த கலவையால்திருமஞ்சனம் பூசி அபிஷேகம் செய்வார்கள். சாமி புத்துணர்வு பெறும். நாம் சாமிக்கு புத்துணர்வு ஊட்ட முடியுமா? இது எதற்காக என்றால் நமது உடலின் ஒவ்வொரு நரம்பு முடிச்சும் சோர்ந்து விடும் பொழுது குளிப்பதன் மூலம் அதற்கு புத்துணர்வு கொடுக்க முடியும் என்று ஆன்மீகமாக கூறினார்கள்.


நிலாவை காட்டி சோறு ஊட்டுவது போல், தெய்வத்தை காட்டி, காட்டி தான் நம் முன்னோர்கள் நம் வாழ்வை செழிமைப்படுத்தினார்கள். எனவே நம்மை எளிமை படுத்தக்கூடிய மாதம் ஆனி மாதம்.


வாழ்க்கை மிக எளிமையானது. ஆனால் நாம் தான் அதை கஷ்டமாக நினைத்து மாட்டிக் கொண்டுள்ளோம். அக்குபஞ்சரின் ஆதாரம் என்பது நரம்புகளின் தட்பவெப்ப நிலையை சமநிலைப்படுத்தும். எனவே அக்குபஞ்சர் என்பது 12ல் 1 பகுதி தான். அக்குபஞ்சருக்கு மற்றவை பற்றி தெரியாது.



மண்டலம்                    : நரம்பு மண்டலம்
குணம்                            : எளிமை
மாதம்                             : ஆனி
உடலின் செயல்பாடு : தட்ப வெப்ப நிலையை பராமரித்தல்.

Comments